துளசி இலைகளின் 10 ஆரோக்கிய நன்மைகள்
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகிறது.மூலிகையின் அரசி என்று அறியப்படும் இந்த துளசி செடியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு ஏற்படும் சளி,இருமல் போன்றவற்றிற்கு துளசியானது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.துளசி பாரம்பரியமாக சில வாஸ்து நன்மைகளை கொண்டுள்ளது என்று பெரியவர்களால் இன்றளவும் நம்பப்படுகிறது.எனவே இந்திய மரபுகளில் இந்த செடிக்கு முக்கிய இடம் உண்டு.இந்தியாவில் சளி இருமலுக்கு இந்த இலைகள் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. துளசியில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்,அழகுசாதனத் தயாரிப்பு,தோல் பராமரிப்பு,வாசனை திரவியம் மற்றும் ஷாம்பு …