சளி மற்றும் இருமலை குணப்படுத்த உதவும் ஏலக்காய்!

Health Insurance Plans starting at Rs.15/day*

Health Insurance Plans starting at Rs.15/day*

நறுமணமும், நற்குணமும் நிறைந்த ஏலக்காய் – ஒரு அறிமுகம்: 

ஜலதோஷம் மற்றும் இடைவிடாத இருமலுக்கு இயற்கையான மருந்தாக நாம் எண்ணற்ற மூலிகைகளை பார்த்திருப்போம். ஆனால் நறுமணத்திற்காக பெயர் பெற்ற ஏலக்காய் ஒரு சிறந்த நிவாரணி என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. இந்தியாவின் பசுமையான மலைப்பகுதிகளில் விளையும் இந்த ஏலக்காய் பல நூற்றாண்டுகளாக சமையல் மற்றும் மருத்துவ நடைமுறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வலைப்பதிவில் ஏலக்காயின் சக்திவாய்ந்த மருத்துவ ரகசியங்களை பற்றி காண்போம்; மேலும், சளி மற்றும் இருமலை குணப்படுத்த அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் தெரிந்துகொள்வோம்.

ஜலதோஷம் மற்றும் இருமலின் அடிப்படை: 

ஏலக்காயின் சிகிச்சை பண்புகளை ஆராய்வதற்கு முன், நாம் எதிர்கொள்ளும் நோய்களின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம். பெரும்பாலும் ரைனோ வைரஸ்களால் ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, தும்மல், தொண்டை புண் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. இருமல், சுவாசக் குழாயிலிருந்து எரிச்சலூட்டும் காரணிகள் மற்றும் சளியை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அனிச்சை செயல் என்பதையும் நம்மில் பலர் அறிவோம். பெரும்பாலும் சளியுடன் சேர்ந்து வரும் ஒரு அறிகுறியாக இருமல் வெளிப்படுகிறது.

ஏலக்காய் – தனித்துவமான நிவாரணி: 

எண்ணற்ற வீட்டு வைத்திய தீர்வுகளுக்கு மத்தியில், ஏலக்காய் அதன் பன்முகத்தன்மை வாய்ந்த மருத்துவ குணங்களின் மூலம் தனித்து நிற்கிறது. இந்த நறுமணமான மசாலா பொருளில் – சினியோல் (cineole), டெர்பைனீன் (terpinene) மற்றும் லிமோனீன் (limonene) உள்ளிட்ட பயோஆக்டிவ் சேர்மங்கள் அதிகளவில் உள்ளன. அவை ஒவ்வொன்றும் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு ஆற்றலையும்,  எக்ஸ்பெக்ட்டோரண்ட் (சளியை வெளியேற்றும்) பண்புகளையும் கொண்டுள்ளன.

ஏலக்காயின் மருத்துவ உட்பொருட்கள் – ஒரு விரிவான பார்வை:

1. பாக்டீரியாக்களை எதிர்க்கும் பேராற்றல்:

ஏலக்காயை “பாக்டீரியாவை எதிர்க்கும் பேராற்றல் ” என நாம் சொல்வதற்கு காரணம், அது நமது சுவாசக் குழாயில் உள்ள பாக்டீரியா தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் அதீத திறனைக் கொண்டிருப்பதனால் தான். சுவாச மண்டலத்தில் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் சைனசைட்டிஸ் (sinusitis), ப்ரான்கைட்டிஸ் (மூச்சுக்குழாய் அழற்சி) மற்றும் நிமோனியா போன்ற பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றலை பின்வரும் நுண் கூறுகள் வழங்குகின்றன :

i) சினியோல் (யூகலிப்டால் – Eucalyptol) : ஏலக்காயின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டில் இந்த சேர்மம் முக்கிய பங்கு வகிக்கிறது. சினியோல் அதன் ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகளுக்காக விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது; குறிப்பாக ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே (Streptococcus pneumoniae) மற்றும் ஸ்டேஃபிளோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) போன்ற கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாக்களுக்கு எதிராக நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ii) லினலூல் (Linalool) : ஏலக்காயில் காணப்படும் மற்றொரு முக்கிய சேர்மமான, லினலூல், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றல் இதற்கு இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது. இது சுவாச மண்டல நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ள வேதிப்பொருளாக அறியப்படுகிறது.

iii) ஆல்பா-டெர்பைனியால் (Alpha-Terpineol) : பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற ஆல்பா- டெர்பைனியால் சுவாசக் குழாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் ஏலக்காயின் திறனை மேம்படுத்துகிறது.

ஏலக்காய் எப்படி பாக்டீரியாவை எதிர்க்கிறது : இந்த சேர்மங்கள் பாக்டீரியாவின் உயிரணு சவ்வுகள் அல்லது பாக்டீரியாவின் வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் பாதிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் செயல்படுகின்றன; இறுதியில் அவற்றின் பாதிப்புகளைத் தடுக்கிறது, அல்லது அவற்றை அழிக்கிறது. குறிப்பிட்ட பாக்டீரியா இனங்களை மட்டும் குறிவைப்பதன் மூலம், ஏலக்காய் சுவாச மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. இதனால் நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் சுவாச நோய்களிலிருந்து மீள உதவுகிறது.

2. ஆன்ட்டிவைரல்  ஆற்றல்:

ஏலக்காய் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ்களைத் தடுக்கவும், உடலின் நோயெதிர்ப்பு பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. ஜலதோஷம் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ் தொற்றுகள் சுவாச மண்டலத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. அதனை சமாளிக்க ஏலக்காயில் உள்ள பின்வரும் கூறுகள் உதவுகின்றன:

i) டெர்பீனைன் (Terpinene) : ஏலக்காயில் காணப்படும் இந்த சேர்மம் – சளி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் உட்பட பல்வேறு வைரஸ்களுக்கு எதிரான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

ii) மைர்சீன் (Myrcene) : ஏலக்காயில் உள்ள மைர்சீன் என்கிற சேர்மத்திற்கு வைரஸ் தடுப்பு பண்புகள் உள்ளன. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ்கள் பெருகுவதை தடுப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலுக்கு எதிராக உடலின் பாதுகாப்பு செயல்முறைக்கு உதவுகிறது.

iii) லிமோனீன் (Limonene) : ஏலக்காயின் மற்றொரு முக்கிய அங்கமாக இருக்கும் லிமோனீனுக்கும் வைரஸ் எதிர்ப்பு திறன் உள்ளது. சுவாசக் குழாயில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்த சேர்மம் உதவுகிறது.

ஏலக்காய் எப்படி வைரஸ்களை எதிர்க்கிறது: மேற்கூறிய சேர்மங்கள் வைரஸ்கள் பெருக்கமடையும் செயல்முறைகளில் தலையிடுகின்றன, அல்லது ஹோஸ்ட் உயிரணுக்களுடன் வைரஸ் சேர்ந்து கொள்வதைத் தடுக்கின்றன; இதனால் வைரஸ் தொற்றுநோய்களின் பரவல் மற்றும் தீவிரத்தை கட்டுப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வைரஸ்களுக்கு எதிரான துல்லியமான செயல்பாட்டின் மூலம், ஏலக்காய் உடலின் உள்ளார்ந்த வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த உதவுகிறது.

3. சளியை வெளியேற்றும் திறன்:

சிறந்த “எக்ஸ்பெக்ட்டோரண்ட்” என்ற முறையில், ஏலக்காய் விடாப்பிடியான நெஞ்சு சளி மற்றும் மூக்கு சளியை நீர்த்துப் போகச் செய்கிறது. இதனால் மூச்சடைப்புலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு எளிதாக சுவாசிக்கவும் உதவுகிறது. அதிகப்படியான சளி உற்பத்தி மற்றும் நெஞ்சு சளி ஆகியவை சுவாச நோய்த்தொற்றுகளின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.  இதனால் இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமங்கள் அதிகரிக்கின்றன. இந்த சளியை வெளியேற்றும் ஏலக்காயின் சேர்மங்கள் பின்வருமாறு :

i) கேம்ஃபீன் (Camphene) : ஏலக்காயில் காணப்படும் இந்த சேர்மம் ஒரு எக்ஸ்பெக்ட்டோரண்டாக செயல்படுகிறது; சுவாசக் குழாயிலிருந்து சளியை வெளியேற்றி சுவாச தொந்தரவை குணப்படுத்துகிறது.

ii) ஃபைனீன் (Pinene) : ஏலக்காயில் உள்ள ஆல்பா-ஃபைனீன் மற்றும் பீட்டா-ஃபைனீன் இரண்டுக்கும் சளியை வெளியேற்றும்  பண்புகள் உள்ளன. திரவ சுரப்புகளை அதிகரித்து அவை வெளியேறுவதை  ஊக்குவித்து சுவாசிப்பதை எளிதாக்குகின்றன.

iii) சபினீன்ன் (Sabinene) : சுவாசத் திரவங்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும், சளியை நீர்த்துப் போகச்செய்து சுவாசப்ப்பாதைகளில் இருந்து அவற்றை அகற்ற இந்த சேர்மம் உதவுகிறது.

சளியை வெளியேற்ற ஏலக்காய் செயல்படும் முறை: மேற்கூறிய சேர்மம்கள் பொதுவாக சுவாச திரவங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும், சளியினை நீர்த்துப் போகச்செய்வதன் மூலமாகவும், சுவாசப்பாதைகளில் இருந்து அவற்றை அகற்றுகின்றன. இதனால் இருமலும் குறைகிறது.

4. ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகள் :

ஏலக்காயின் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகள் மூச்சு குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்திற்கு இதமளிக்கின்றன. இன்ஃப்ளமேஷன் என்பது சுவாச நோய்த்தொற்றுகள் மற்றும் எரிச்சலூட்டும் காரணிகளை எதிர்கொள்ள நமது உடல் வெளிப்படுத்தும் ஒரு பொதுவான செயலாகும். தொண்டை புண், இருமல் மற்றும் மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை இன்ஃப்ளமேஷன் உண்டாக்குகிறது. இன்ஃப்ளமேஷனை குறைக்க உதவும் சேர்மங்கள் பின்வருமாறு:

i) ஆல்ஃபா-டெர்பைனியோல் : இந்த சேர்மம் அதன் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடு மட்டுமல்லாமல், ஆன்ட்டி- இன்ஃப்ளமேஷன் விளைவுகளையும் வெளிப்படுத்துகிறது; இது சுவாச மண்டலத்தில் உள்ள  இன்ஃப்ளமேஷன் மற்றும் அசௌகரியத்தைப் போக்க உதவுகிறது.

ii) லினலூல் (Linalool) : ஏலக்காயின் முக்கிய அங்கமான லினலூலுக்கு ஆன்ட்டி- இன்ஃப்ளமேஷன் பண்புகள் உள்ளன. இது சுவாசக் குழாயில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் இருமலும் குறைகிறது.

iii) பீட்டா-காரியோஃபைலீன் (Beta-Caryophyllene) : ஏலக்காயில் காணப்படும் பீட்டா- காரியோஃபைலீனுக்கு இன்ஃப்ளமேஷனை எதிர்க்கும் இயற்கையான பண்பு உள்ளது. சுவாச மண்டலத்தில் இன்ஃப்ளமேஷன் தொடர்பான இருமல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளுக்கு நிவாரணம் தருகிறது.

இன்ஃப்ளமேஷனை குறைக்க ஏலக்காய் செயல்படும் விதம்: மேற்கூறிய சேர்மங்கள் இன்ஃப்ளமேஷனால் தடைபட்ட சுவாசப் பாதைகளை சீரமைப்பது மற்றும் எரிச்சலூட்டும் திசுக்களுக்கு இதமளிப்பதன் மூலமும் செயல்படுகின்றன. சுவாசக் குழாயில் ஏற்படும் இன்ஃப்ளமேஷனை தணிப்பதன் மூலம், அதன் அறிகுறிகளால் உண்டாகும் அசௌகரியத்தைத் தணிக்க ஏலக்காய் உதவுகிறது.

சளி மற்றும் இருமலை குணப்படுத்த ஏலக்காயை பயன்படுத்தும் விதங்கள்: 

ஏலக்காயின் மருத்துவ கூறுகள் பற்றி விரிவாகப் பார்த்தோம், இனி அதனை எப்படியெல்லாம் உட்கொள்ளலாம் என்பது குறித்து காண்போம்.

  1. ஏலக்காய் தேநீர் : பொடியாக்கிய ஏலக்காய் தூளை கொதிக்கும் நீரில் சேர்த்து கொதிக்க விடவும். அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து சுவையை அதிகரிக்கவும். ஏலக்காயின் நன்மைகளுடன் தேன் மற்றும் எலுமிச்சையுடன் கூடுதல் ஆற்றலும் கிடைக்கிறது. சளி மற்றும் இருமலுக்கு எதிரான விரிவான நிவாரணத்தை வழங்கும் ஒரு இதமளிக்கும் பானமாக இது இருக்கும்.
  2. ஏலக்காய் நீராவி சிகிச்சை : நசுக்கிய  ஏலக்காய்களை ஒரு பாத்திரத்தில் உள்ள சூடான தண்ணீரில் போடவும். அப்போது வெளிவரும் நீராவியை, ஒரு போர்வையால் மூடிய படி  உள்ளிழுத்து ஆழமாக சுவாசிக்கவும்.  நறுமணமான இந்த  நீராவியில் நாம் மேலே பார்த்த சேர்மங்கள் யாவும் கலந்து, நீராவியின் மூலம் சுவாசப் பாதைகளில் ஊடுருவி எங்கும் சென்றடையும். நீராவி சளியை இலகுவாக்கி மூக்கடைப்பு, மற்றும் இருமலிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
  3. இதமான கொப்பளிக்கும் சிகிச்சை : வெதுவெதுப்பான நீரில், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஏலக்காய் பொடியை கலந்து கொள்ளவும். ஏலக்காய் நன்கு பொடியாக்கப்படுவது அவசியமாகும்.  இல்லையென்றால் புரையேறிவிடும் அபாயம் உள்ளது. பின்னர் இந்த கலவையை கொண்டு தொண்டையில் படுமாறு அண்ணார்ந்து கொப்பளிக்கவும்.  தொண்டை எரிச்சலைப் போக்கவும், பாக்டீரியா வளர்ச்சியை எதிர்த்துப் போராடவும், இந்த கரைசல் உதவும். சளி இருமலால் தொண்டை புண் உள்ளவர்களுக்கு இந்த முறை மிகுந்த பலன் தரும்.
  4. இதமான ஏலக்காய் மசாலா பால் : ஏலக்காய் பொடி மற்றும் மஞ்சள் தூள் கலந்த  சூடான பாலில் தேன் கலந்து அருந்தலாம். இது இருமலை குறைக்கவும், சளியை நீர்த்துப் போகச் செய்யவும், நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கவும் உதவும். உறங்கும் முன் இந்த பானத்தை அருந்த வேண்டும்.
  5. ஏலக்காய் சூப் : இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் ஏலக்காய் சேர்த்து உருவாக்கப்பட்ட சூப்பில் ஏலக்காயின் சேர்மங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சளின் நற்குணங்களும் கிடைக்கின்றன. சளி மற்றும் இருமலுக்கு எதிரான ஆற்றல் மிக்க பானமாக இருக்கும் இந்த சூப் – சளியை கரைத்து வெளியேற்றுகிறது.  இருமலைப் போக்கவும், தொண்டை எரிச்சலைத் தணிக்கவும், சளியின் அனைத்து அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்க இது ஒரு சூப்பர் பானமாகும். இதனை காலை, மதியம் மற்றும் மாலை வேளையில் மட்டும் பயன்படுத்தவும். வயிற்று பிரச்சினைகள் உள்ளவர்கள் இதனைத் தவிர்க்கவும்.
  6. ஏலக்காய், புதினா, லெமன் மொஹிட்டோ : எலுமிச்சை சாற்றை குளிர்ந்த நீரில் கலந்து, ஏலக்காய் தூள் மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். இனிப்புக்கு தேன் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை கலந்துகொள்ளவும். பின்னர் அதனை வடிகட்ட இதமான ஒரு மொஹிட்டோ தயார். சூடான பானங்களுக்கு பதிலாக குளிர் பானங்களை விரும்பும் நபர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும். புத்துணர்ச்சியூட்டும் இந்த பானத்தில் ஐஸ் சேர்க்க நீங்கள் தூண்டப்படலாம், ஆனால் சளி மற்றும் இருமல் அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற அதனைத் தவிர்க்க வேண்டும். ஏலக்காயின் சேர்மங்கள், எலுமிச்சையிலிருந்து வைட்டமின் C மற்றும் புதினாவின் நற்குணங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து சுவாச நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது.

எச்சரிக்கை குறிப்பு : ஏலக்காய் பொதுவாக பலருக்கும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், அதற்கு ஒவ்வாமை உள்ள சிலர் அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் ஏலக்காயை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் ஏலக்காய் பித்தப்பை கற்களின் விளைவுகளை அதிகரிக்கக்கூடும்.

முடிவுரை:

ஜலதோஷம் மற்றும் தொடர்ச்சியான இருமலிலிருந்து இயற்கையான வழியில் நிவாரணம் பெறுவதற்கான தேடலில், வெறும் சமையல் பொருளாக பயன்படுத்தப்படும் பல்வேறு உட்பொருட்கள் மருத்துவ குணங்களை வெளிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அந்த வகையில் ஏலக்காய் அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்கள் மற்றும் வசீகரிக்கும் நறுமணத்துடன் ஒரு சக்திவாய்ந்த நிவாரணியாக தனித்து நிற்கிறது. எனவே, சளி அல்லது இருமலை எதிர்கொள்ளும் போது ஏலக்காயை நினைவில் கொள்ளவும். சளி மற்றும் இருமலை குணப்படுத்தவும் உடலை மீட்டெடுக்கவும் தேவையான மருத்துவ குணங்கள் இதில் உள்ளன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. ஏலக்காயை உட்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?

ஏலக்காய் பொதுவாக பாதுகாப்பானது; ஆனால் அதிகப்படியாக உட்கொள்வதால் இரைப்பை குடல் அசௌகரியம் ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகள் அரிதாக ஏற்படலாம்.

2. குழந்தைகள் ஏலக்காயை உட்கொள்வது பாதுகாப்பானதா?

ஆம், மிதமாக உட்கொள்வது பாதுகாப்பானது. ஆனால் சில குழந்தைகளுக்கு ஏலக்காயின் நறுமணம் பிடிக்காமல் போகலாம், அவர்களை நிர்பந்திக்க வேண்டாம்.

3. ஏலக்காயுடன் எந்தெந்த உணவுகளை சேர்க்கக்கூடாது?

காபி அல்லது பிளாக் டீ போன்ற கஃபைன் நிறைந்த பானங்களுடன் ஏலக்காயை சேர்ப்பதைத் தவிர்க்கவும்; ஏனெனில் இது அபரிமிதமான புத்துணர்வு விளைவுகளை தூண்டிவிடலாம்.

4. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை ஏலக்காய்களை உட்கொள்ளலாம்?

அப்படி எந்தவொரு குறிப்பிட்ட வரம்பும் இல்லை என்றாலும், ஒரு நாளைக்கு 10 ஏலக்காய்க்கு குறைவாக மிதமாக உட்கொள்வது நல்லது.

5. ஏலக்காய் வாசனை குமட்டலை ஏற்படுத்துமா?

ஏலக்காய் வாசனை பொதுவாக பலருக்கும் பிடிக்கும். இருப்பினும் நுகர்வு உணர்திறன் வாய்ந்த நபர்களுக்கு இதன் வலுவான வாசனை காரணமாக குமட்டல் அல்லது அசௌகரியம் ஏற்படலாம். குறிப்பாக நீண்ட நேரம் இந்த வாசனையில் இருப்பதை  அவர்கள் தவிர்க்க வேண்டும்.


DISCLAIMER: THIS BLOG/WEBSITE DOES NOT PROVIDE MEDICAL ADVICE

The Information including but not limited to text, graphics, images and other material contained on this blog are intended for education and awareness only. No material on this blog is intended to be a substitute for professional medical help including diagnosis or treatment. It is always advisable to consult medical professional before relying on the content. Neither the Author nor Star Health and Allied Insurance Co. Ltd accepts any responsibility for any potential risk to any visitor/reader.

Scroll to Top